Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்செல் அலுவலகம் மீது தாக்குதல் - சேவை முடங்கியதால் ஆத்திரம்

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (14:30 IST)
சேவை முடங்கியதோடு, அலுவலகத்தையும் பூட்டி சென்றாதால் ஏர்செல் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அதேபோல், வேறு நெட்வொர்க் பயன்படுத்துபவர்களால், ஏர்செல்லை பயன்படுத்துபவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அதனால், வாடிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்தனர். அதோடு, ஏர்செல் நெட்வொர்க் இனிமேல் இயங்காது என்ற செய்தியும் பரவியது.
 
ஆனால், தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக தற்காலிகமாக சேவை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஓரிரு நாட்களில் சரியாகி விடும் என ஏர்செல் நிறுவனம் சார்பில் நேற்று கூறப்பட்டது.
 
இந்நிலையில், இன்று சென்னை அருகே உள்ள தாம்பரத்தில் உள்ள ஒரு ஏர்செல் சேவை மையத்தின் முன்பு இன்று காலை பலர் திரண்டனர். அப்போது அலுவகம் பூட்டப்பட்டது. எனவே, கோபமடைந்த சிலர் கற்களை கொண்டு தாக்கினர். இதில், அலுவகத்தின் பெயர் பலகை, பேனர்கள் கிழிந்து தொங்கின. அதன் பின் அங்கு போலீசார் சென்று அவர்களை கலைய செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments