Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியின் கள்ளக்காதலனின் கண்களில் ஆசிட் ஊற்றிய கணவன்

மனைவியின் கள்ளக்காதலனின் கண்களில் ஆசிட் ஊற்றிய கணவன்
, திங்கள், 19 பிப்ரவரி 2018 (09:10 IST)
பீகாரில் தன்னுடைய மனைவியோடு கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்தவரின் கண்களில், அவரது கணவர் அசிட் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர், டிராக்டர் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள விவசாயி ஒருவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனால் விவசாயிக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
 
இதனையடுத்து சமீபத்தில் விவசாயியின் மனைவியும், அவருடன் கள்ளதொடர்பில் இருந்த இளைஞரும் தப்பியோடினர். இதுகுறித்து விவசாயி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விவசாயியின் மனைவியை மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.
 
இந்நிலையில் கோபத்தில் இருந்த விவசாயி தன் மனைவியுடன் கள்ள உறவில் இருந்த இளைஞரை தாக்கி, ஊசியில் ஆசிட் ஏற்றி இளைஞரின் கண்களுக்குள் செலுத்தியுள்ளார். இதில் இளைஞருக்கு கண் பார்வை பறிபோய்விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் விவசாயியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்து கட்டணத்தை உயர்த்த ஸ்டிரைக் நடத்தும் தொழிலதிபர்கள்