Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கைதான தடகள ஆசிரியருக்கு ஜூன் 11ஆம் தேதி வரை சிறை!

கைதான தடகள ஆசிரியருக்கு ஜூன் 11ஆம் தேதி வரை சிறை!
, ஞாயிறு, 30 மே 2021 (10:53 IST)
கைதான தடகள ஆசிரியருக்கு ஜூன் 11ஆம் தேதி வரை சிறை!
பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் உள்ள தடகள ஆசிரியர் நாகராஜன் என்பவர் தடகள வீராங்கனை ஒருவருக்கு பாலியல் தொல்லை தந்ததாக செய்தி வெளியானது
 
இதனையடுத்து அந்த வீராங்கனை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து நாகராஜனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் நீதிமன்றத்தில் சற்று முன் ஆஜர் செய்தபோது ஜூன் 11ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. தடகல வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீக்கிரம் வருவேன்; கட்சியை காப்பாற்ற..! – சசிகலா ஆடியோவால் பரபரப்பு