Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுபோதையில்...காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்த காவலர் !

மதுபோதையில்...காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்த காவலர் !
, வெள்ளி, 26 ஜூன் 2020 (23:44 IST)
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பால சுப்பிரமணியம். இவரை உடன் பணியாற்றி வந்த முதல்நிலை காவலர் கன்னத்தில் அறைந்தாதல் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 9 ஆம் தேதி மது அருந்திவிட்டு வந்த  முதல்நிலை காவலர்  ஜாகிர் உசேன்,  புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர்   பாலசுப்பிரமணியன் உடன் வாக்குவாததில் ஈடுபட்டதுடன் அவரை மதுபோதையில் கன்னத்தில் அறைந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து பாலசுப்பிரமணியம் புகார் அளித்ததன்பேரில் , ஜாகிர் உசேன் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த பிரச்சனை தொடர்பால விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அந்த மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி குமார் ஜாகிர் உசேனை  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மஹாரஷ்டிராவில் இன்று 5,024 பேருக்கு கொரோனா உறுதி; மேலும் 175 பேர் உயிரிழப்பு!