Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூக்கி வீசிய எடை மெஷினுக்கு பதிலாக புதிய மெஷின்; வீடியோ வைரலான நிலையில் காவல்துறை நடவடிக்கை!

Advertiesment
Tamilnadu
, வெள்ளி, 26 ஜூன் 2020 (13:42 IST)
திருப்பத்தூரில் பலசரக்கு கடையின் எடை மெஷினை தூக்கி எரிந்து காவலர் அத்துமீறிய வீடியோ வைரலான நிலையில் புதிய மெஷினை மாவட்ட எஸ்.பி நேரில் சென்று அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடசமுத்திரம் கூட்ரோடு பகுதியில் பலசரக்கு கடை வைத்திருப்பவர் ராஜா. வழக்கம்போல கடையை அவர் திறந்து வைத்திருந்த நிலையில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் ரகுராமன் என்பவர், ராஜா கடையை திறந்து வைத்திருந்ததற்கு ஆவேசமாக பேசியதுடன் அங்கிருந்த எடை மெஷினையும் தூக்கி போட்டு உடைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட கடைக்காரரை நேரில் சென்று சந்தித்த மாவட்ட எஸ்.பி விஜயகுமார் புதிய எடை மெஷினை ராஜாவுக்கு வாங்கி கொடுத்துள்ளார். பிறகு பொதுமக்கள், வியாபாரிகளிடம் போலீஸார் கடுமையாக நடந்துக் கொள்ள கூடாது என்றும் அறுவுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்ஜெட் ரேஞ்ச் இல்ல இருந்தாலும்... வசீகரிக்கும் ரியல்மி எக்ஸ்3!!