Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் 48 மணி நேரத்தில்... வலுவிழக்கும் அசானி புயல்!

இன்னும் 48 மணி நேரத்தில்... வலுவிழக்கும் அசானி புயல்!
, திங்கள், 9 மே 2022 (11:05 IST)
வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் 48 மணி நேரத்தில் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
இந்தியா முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற நிலையில் அதற்கு அசானி என பெயரிடப்பட்டது.
 
தற்போது அசானி புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயலானது நாளை ஒடிசா மற்றும் ஆந்திர கடற்கரையோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
நாளை முதல் 3 நாட்களுக்கு கடலோர ஒடிசா பகுதிகளில் மிக கனமழைக்கும், வட கடலோர ஆந்திர பகுதிகளில் நாளை மாலையும் மிக கனமழைக்கு வாய்ப்பு. இதனைத்தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் 48 மணி நேரத்தில் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்தமான் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?