Publish Date: Wed, 16 Feb 2022 (11:41 IST)
Updated Date: Wed, 16 Feb 2022 (11:45 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வந்த நிலையில் திடீரென விசாரணை நிறுத்தப்பட்டது
இந்த நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் இந்த விசாரணைக்கு மீண்டும் அனுமதி அளித்த நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது
முதல் கட்டமாக நீதிபதி ஆறுமுகசாமி, சசிகலா மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் இதனை அடுத்து அடுத்த கட்ட விசாரணை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அப்போது தரப்பு ஏற்கனவே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது