Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எதிர்க்கட்சியாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! அருள் ஆறுமுகம்

Mahendran
சனி, 20 ஜனவரி 2024 (17:13 IST)
திமுக ஆளும் கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
 திமுக எதிர்கட்சியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது என்றும் ஏனென்றால் எதிர்கட்சியாக இருந்த போது எட்டு வழிச்சாலைக்கு எதிராக அவ்வளவு தீவிரமாக போராடியது திமுக தான் என்றும் தெரிவித்தார். 
 
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தது திமுக என்றும் ஆளுங்கட்சியானதால் திமுக அரசு விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போட்டுள்ளது என்றும் அவர் கூறினார் 
 
மேலும் தான் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் மறந்து விட்டாரா இல்லை வேறு ஏதேனும் ஆட்சி நடத்துகிறார்களா என்ற சந்தேகம் எழுதுவது என்றும் சிப்காட்டுக்கு எதிராக போராடியதற்காக குண்டர் சட்டம் போடப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது என்றும் அவர் கூறினார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments