Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல் கிடைக்குமா? அற்புதம்மாள் மனு

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (16:25 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சமீபத்தில் பரோல் கிடைத்தது. ஒரு மாதம் கிடைத்த பரோல் கடந்த மாதமே முடிவடைந்தாலும் பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பரோல் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க முதல்வரிடம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மனு கொடுத்துள்ளார்



 
 
பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு இன்னும் சிகிச்சை முடிவடையவில்லை என்றும், சிகிச்சையின் பாதியில் விட்டுச்செல்ல பேரறிவாளன் விரும்பாததால் இன்னும் ஒரு முறை பரோலை நீட்டிக்க வேண்டும் என்றும் அற்புதம்மாள் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் பேரறிவாளன் மிக நீண்ட காலமாக சிறையில் இருந்துள்ளதால் அவரை விடுதலை செய்யும் கொள்கை முடிவுடன் இருக்கும் தமிழக அரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments