Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி வழக்கு.. ஏப்ரல் 30ஆம் தேதி முக்கிய உத்தரவு.. ஜாமின் கிடைக்குமா?

Mahendran
வியாழன், 25 ஏப்ரல் 2024 (18:02 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஏப்ரல் 30ஆம் தேதி முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் வரை சென்றும் அவர் ஜாமீன் பெற்று வெளியே வர முடியவில்லை. 
 
இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 30ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் காசோலை செலான் உள்ளிட்ட வங்கி ஆவணங்களில் தேதி மாதம் உள்ளிட்டவை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments