Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி வழக்கு.. ஏப்ரல் 30ஆம் தேதி முக்கிய உத்தரவு.. ஜாமின் கிடைக்குமா?

Mahendran
வியாழன், 25 ஏப்ரல் 2024 (18:02 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஏப்ரல் 30ஆம் தேதி முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் வரை சென்றும் அவர் ஜாமீன் பெற்று வெளியே வர முடியவில்லை. 
 
இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 30ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் காசோலை செலான் உள்ளிட்ட வங்கி ஆவணங்களில் தேதி மாதம் உள்ளிட்டவை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments