Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 27, 28ல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியாது: சத்யபிரதா சாஹூ அறிவிப்பு

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2019 (22:08 IST)
மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்று வேட்பாளர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
கடந்த திங்கட்கிழமை முதல் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனு தொடங்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் விறுவிறுப்பாக தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 27-ல் வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை என்பதாலும், வரும் ஏப்ரல் 28-ம் தேதி ஞாயிறு விடுமுறை காரணமாகவும் இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் இந்த இரண்டு நாட்களில் பெறப்படாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இந்த நான்கு தொகுதிகளிலும் வரும் மே 2ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments