Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எகிறும் ராஜேந்திர பாலாஜியின் க்ரைம் ரேட்! – மேலும் ஒரு புகார்!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (08:35 IST)
ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு புகார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாகியுள்ளார். அவரை 6 தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றன.

இந்நிலையில் தற்போது சாத்தூரை சேர்ந்த ஒருவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சத்துணவில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி மீது புகார்கள் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் கடைசி நாளில் சரிந்தது தங்கம்.. இன்னும் சரிய அதிக வாய்ப்பு?

நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

தவெகவில் ஓபிஎஸ்? அவைத்தலைவர் பதவி வழங்குகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அம்மாவை தப்பா பேசிய உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! - கூட்டணி முறிவை படம் போட்டு காட்டிய ஓபிஎஸ் அறிக்கை!

இந்தியா கச்சா எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் நிற்கும் நிலை வரலாம்..? - ட்ரம்ப் கிண்டல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments