Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 14 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.. இலங்கை கடற்படையின் அத்துமீறல்..!

Siva
வியாழன், 5 டிசம்பர் 2024 (07:50 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் இன்று மீண்டும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உடனடியாக மத்திய மாநில அரசுகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.

முன்னதாக டிசம்பர் 3ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் அவர்கள் பயணம் செய்த இரண்டு விசைப்படகுகளையும் சிறை பிடித்தது. கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடந்ததாகவும் செய்தி வெளியானது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments