Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாது அணைகட்ட எதிர்ப்பு - திட்டமிட்டபடி போராட்டம்: அண்ணாமலை உறுதி!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (13:33 IST)
மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி திட்டமிட்டபடி தஞ்சாவூரில் போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை உறுதி. 

 
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விடாபிடியாக முயன்று வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணைக்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. 
 
இதனைத்தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என தெரிவித்தார். அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மேகதாது அணைகட்ட ஒரு செங்கல்கூட வைக்கமுடியாது என பதிலடிக் கொடுத்தார். 
 
இதனிடையே முன்னதாக மேகதாது அனை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தஞ்சாவூரில் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட பிரதமர் மோடி நிச்சயம் சம்மதிக்க மாட்டார் . மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி திட்டமிட்டபடி தஞ்சாவூரில் போராட்டம் நடத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments