Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாமாதானத்திற்கு கிளம்பிய ராஜ்நாத் சிங்... இனி அவைகள் முடங்காதா?

சாமாதானத்திற்கு கிளம்பிய ராஜ்நாத் சிங்... இனி அவைகள் முடங்காதா?
, செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (13:07 IST)
நாடாளுமன்றம் இன்றுடன் 11 நாட்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

 
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி இன்றுடன் 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு நாளும் அமளி காரணமாக நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
 
இந்நிலையில் இன்றும் வழக்கம்போல அமளியால் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, பாஜக அரசு அவையை நடத்துவதற்கான சமாதான முயற்சிகளை துவகியுள்ளது. அதன்படி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார்.
 
அப்போது முதலில் கோவிட் தொற்று குறித்தும், பின்னர் பெகாசஸ் குறித்தும் விவதாம் நடத்தலாம் என கூறியதாக தெரிகிறது. எனவே நாளை முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம் போல செயல்பட வாய்ப்பு உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் ஐடியா இல்லை – மத்திய அரசு!