Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்சிபியா? சிஎஸ்கேவா? பெங்களூரில் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை கூறிய சுவாரஸ்ய பதில்..!

Siva
புதன், 24 ஏப்ரல் 2024 (17:01 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது பெங்களூரில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு பிடித்த அணி ஆர்சிபியா சிஎஸ்கேவா? என கேட்ட கேள்விக்கு சுவாரசியமாக பதில் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தேர்தல் முடிந்ததும் அண்டை மாநில தலைநகரான பெங்களூரில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக தமிழர்கள் உள்ள பகுதியில் அவர் தமிழில் பேசி பிரச்சாரம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே அண்ணாமலை பெங்களூரில் காவல்துறை அதிகாரி ஆக பணியாற்றியதால் அவருக்கு அங்கு அதிக செல்வாக்கு இருக்கும் நிலையில் அவரது பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் அண்ணாமலை இடம் உங்களுக்கு பிடித்த அணி எது ஆர்சிபி யா அல்லது சிஎஸ்கேவா? என்ற கேள்வி கேட்ட கேள்விக்கு தோனி கடைசி முறையாக விளையாடுவதால் சிஎஸ்கே அணி தான் தனக்கு பிடித்தது என்று அவர் தோனியை வைத்து பதில் கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments