Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாடு தொகுதியில் பின் தங்குகிறார் ராகுல் காந்தி.. உள்ளூர் ஊடகத்தின் கருத்துக்கணிப்பு.!

Siva
புதன், 24 ஏப்ரல் 2024 (16:53 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் பின்தங்கி இருப்பதாக உள்ளூர் ஊடகம் ஒன்று கருத்துக்கணிப்பு வெளியிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் உள்ள ஸ்டார் தொகுதி வயநாடு என்பதும் இங்குதான் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பதும் தெரிந்தது. அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா என்பவர் போட்டியிடுகிறார் என்பதும் அதேபோல் பாஜக சார்பில் சுரேந்திரன் என்பவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இங்கு மூன்று முனை போட்டி இருந்தாலும் ராகுல் காந்தி மற்றும் ஆனி ராஜா ஆகிய இருவர் இடையே தான் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி சுமார் 7 லட்சம் வாக்குகள் பெற்று 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறையும் அவர் வெற்றி பெறுவார் என்று தான் ஆரம்பகட்ட கருத்துக்கணிப்புகள் இருந்தன.

ஆனால் ஆனி ராஜா செய்து வரும் தீவிரமான பிரச்சாரம், முதலமைச்சர் பினராயி விஜயன் ராகுல் காந்தி மீது வைக்கும் நேரடி குற்றச்சாட்டு ஆகியவை காரணமாக ராகுல் காந்திக்கு வாக்கு சதவீதம் குறைந்து வருவதாகவும் தற்போது அவர் பின்னடைவில் இருப்பதாகவும் உள்ளூர் ஊடகம் ஒன்று கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே தான் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments