Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எடப்பாடி பழனிசாமி ஒரு அரைவேக்காடு: அண்ணாமலை அதிரடி பேட்டி..!

annamalai

Siva

, வியாழன், 14 மார்ச் 2024 (19:17 IST)
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போதைப்பொருள் விவகாரத்தில் அரைவேக்காட்டுத்தனமான  பேசுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்த பிறகு திமுகவை விமர்சனம் செய்வது போலவே பாஜகவையும் அண்ணாமலையையும் விமர்சனம் செய்து வருகிறது என்பது தெரிந்தது. இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமாக போதை பொருள் பிடிபடுகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை ’ஒரு பார்டர் மாநிலத்தில் அதிகமாக போதை பொருள் பிடிபடுகிறது என்றால் அங்குள்ள காவல் துறையினர் ஒழுங்காக வேலை செய்கின்றனர் என்று அர்த்தம். இதுகூட புரியாமல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரைவேக்காட்டுத்தனமான பேசுகிறார் என்று தெரிவித்துள்ளார்

மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை போதை பொருள் விற்பவர்களுக்கு அரசே ஆதரவு தந்து வருகிறது என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை..! மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!!