Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை கத்துக்குட்டியா? செல்லூர் ராஜூ கத்துக்குட்டியா ? என்பது மக்களுக்குத் தெரியும் - கரு. நாகராஜன்

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (13:01 IST)
அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ள நிலையில் இதற்கு கரு. நாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘’நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன்’’ என்று அறிக்கை வெளியிட்டதற்கு,  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், ‘’அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டில் தலைவராக பதவியேற்று இருக்கிறார்’’ என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து தமிழக பாஜக  துணைத்தலைவர் கரு. நாகராஜன், செல்லூர் ராஜூ'', இவ்வளவு நாட்கள் எப்படி அமைச்சராக இருந்தார் என்பது விநோதமாக உள்ளது. செல்லூர் ராஜூ இதுபோன்ற பேச்சுகளை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாமலை கத்துக்குட்டியா? செல்லூர் ராஜூ கத்துக்குட்டியா ? என்பது மக்களுக்குத் தெரியும் ''என்று கூறியுள்ளார்.

கூட்டணி கட்சிகளான அதிமுக, பாஜக தலைவர்கள் இடையே இப்படி மாறி மாறி விமர்சிப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments