விமான கதவை அவர் திறக்கவேயில்லை! – தேஜஸ்வி விவகாரத்தில் அண்ணாமலை பதில்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (10:58 IST)
விமானத்தின் அவசர வழி கதவை பாஜக எம்.பி தேஜஸ்வி யாதவ் திறக்கவேயில்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை – திருச்சி இடையே சென்ற இண்டிகோ விமானத்தில் லோக் சபா எம்.பி தேஜஸ்வி சூர்யா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பயணித்தபோது தேஜஸ்வி சூர்யா அவசர வழி கதவை திறந்ததாக வெளியான குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை அவர் தெரியாமல் செய்துவிட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருந்தாலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இது அறியாமல் நடந்த சம்பவம் என விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள தெஜஸ்வியுடன் இருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “தேஜஸ்வி சூர்யா படித்தவர். அவசர கதவை திறக்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை. கதவில் ஒரு இடைவெளி இருந்ததை கண்டு தேஜஸ்வி சூர்யா என்னிடம் சுட்டிக்காட்டினார். விமான குழுவிடமும் தெரிவித்தார். இதனால் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனைகள் நடந்தன. தேஜஸ்வி சூர்யா தவறு செய்ததாக மன்னிப்பு கேட்கவில்லை. அவர்மேல் தவறு இல்லாவிட்டாலும் எம்.பி என்ற பொறுப்பில் உள்ளதால் மன்னிப்பு கேட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments