Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தனித்து போட்டியிட பாஜக முடிவா?

Advertiesment
annamalai
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று திடீரென அண்ணாமலை ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளை கவனிக்க குழு ஒன்றை அமைத்தார்
 
இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக தனித்து போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தனித்து போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்று விட்டால் கூட அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்டு பெறலாம் என்ற திட்டத்தில் தான் பாஜக தனித்து போட்டியிடப்பதாக கூறப்படுகிறது
 
ஆனால் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுக தனது கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸுக்கு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் விலக்கு: தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்