Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை: தமிழக அரசு கடிதம்!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (07:39 IST)
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தரலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே. சூரப்பா மத்திய மனித வளத் துறைக்கு எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறப்பு அந்தஸ்து விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
 
இந்த நிலையில் தமிழ்க அரசிடம் சொன்னதையே கடிதமாக எழுதினேன் என துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்த நிலையில் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களும் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. உயர் சிறப்பு அந்தஸ்து குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது என்பதும் இந்த குழுவில் அமைச்சர்கள் அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோர் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் காரணமாக அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காது என்றே கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து

ராஜஸ்தான் மாநிலம் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலுக்குள் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவன் சொல்வது ஏற்புடையது அல்ல.. கம்யூனிஸ்ட் கட்சி சண்முகம் கண்டனம்..!

ஓடும் காரின் கண்ணாடியை உடைத்து கொண்டு பாய்ந்த மான்.. மிஸ் யுனிவர்ஸ் அழகி பரிதாப பலி..!

எம்.எல்.ஏ வீட்டின் முன் திடீரென போராட்டம் நடத்திய ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments