Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பி.இ., பி.டெக், படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை

Advertiesment
அண்ணா பல்கலைக்கழகம்
, புதன், 2 செப்டம்பர் 2020 (16:30 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்கல் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்களும் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கும் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு ஆன்லைன் மூலமே சான்றிதழ் பதிவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, பிடெக், பிஆர்க் மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பம் அனுப்ப நேற்று கடைசி நாளாக இருந்தது நிலையில் தற்போது விண்ணப்பிக்க கால அவகாசம் அளித்துள்ளது
 
பிஇ, பிடெக், பிஆர்க் மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு நாளையுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில்  மேற்கண்ட படிப்புகளுக்கு வெளி மாணவர்கள் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 வரை அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி வகுப்பறைகளும்.....கரோனா கற்றுத்தந்த பாடங்களும்!