Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் பாஜக டெபாசிட் பெற்றால் அரசியலை விட்டே விலகுகிறேன்..! அனிதா ராதகிருஷ்ணன்

Mahendran
புதன், 6 மார்ச் 2024 (12:26 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து பாஜக போட்டியிட்டு டெபாசிட் தொகை மட்டும் வாங்கி விட்டால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ’குலசேகரப்பட்டணம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போது ஏவுதள  திட்டத்தை நான் தான் விளம்பரம் செய்து வெளியிட்டேன். அதில் ஒரு சிறு தவறு நடந்து விட்டது, அதை பாஜகவினர் அரசியல் செய்கின்றார்கள் 
 
நான் அண்ணாமலைக்கு ஒரு சவால் விடுகிறேன், தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு நீங்கள் டெபாசிட் மற்றும் வாங்கி விட்டால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என் சவாலை ஏற்றுக் கொள்ள அண்ணாமலை தயாரா என்று கேட்டுள்ளார்
 
 நாங்கள் இந்துக்கள் என்று சொல்லக்கூடிய பாஜகவினரால் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவை தொட்டு பார்க்க முடியுமா என்றும் அவர் சவால் விட்டார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments