Publish Date: Wed, 01 Nov 2017 (18:37 IST)
Updated Date: Wed, 01 Nov 2017 (18:39 IST)
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் காற்றின் வேகத்தை கண்டறியும் அனிமோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு, விமான நிலையம், ஆலந்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த அனிமோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்
அனிமோ மீட்டர் உதவியால் காற்றின் வேகத்தை கண்டறிந்து அதன்மூலம் ரயில்கள் இயக்கப்படும். காற்றின் வேகம் ஒருவேளை 90கிமீக்கும் மேல் இருந்தால் உடனடியாக மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டு காற்றின் வேகம் குறைந்தவுடன் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
மேலும் காற்றின் வேகம் 70 கிமீக்கும் மேல் இருந்தால் ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்படும் என்று கூறிய அதிகாரிகள், மழை நேரங்களில் மெட்ரோ ரயில் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்காத வகையில் மின்மோட்டார் இயக்க தயார் நிலையில் மெட்ரோ நிர்வாகம் இருப்பதாக தெரிவித்தனர்/