Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரி மேம்பாட்டு ஆணையம் சாத்தியமில்லை; நீர்வளத்துறை அமைச்சர் தடாலடி

காவிரி மேம்பாட்டு ஆணையம் சாத்தியமில்லை; நீர்வளத்துறை அமைச்சர் தடாலடி
, செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (17:40 IST)
காவிரி மேம்பாட்டு ஆணையம் அமைப்பது சாத்தியமில்லை என்று மத்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
 
சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துக்கொள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தமிழக வந்தார். காவிரி பிரச்ச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்று பேட்டி ஒன்றில் கூறினார்.
 
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கட்சிகள் சார்ப்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமரை நேரில் சந்தித்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என தீர்மானம் நிரைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க சாத்தியமில்லை என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காவிரி விவகாரத்தில் தமிழக உரிமையை பெற்றுத்தருவோம் என்று உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்னர் மீது கருப்பு கொடி வீச்சு: காஞ்சிபுரத்தில் பரபரப்பு