Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தேர்தல் விவசாயிக்கும் முதலாளிக்கும் நடக்கும் போட்டி: அன்புமணி

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (18:55 IST)
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதும் அந்த 23 தொகுதிகளிலும் பாமக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று தீவிரமாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு விவசாயி என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஒரு முதலாளி என்றும் இந்த தேர்தல் விவசாயிக்கும் முதலாளிக்கும் இடையே நடக்கும் போட்டியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்
 
மேலும் கடந்த 10 ஆண்டு காலமாக எந்த பிரச்சனையும் இன்றி தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது என்றும் திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அராஜகம் தொடரும் என்றும் எனவே அதிமுக கூட்டணியை ஆதரித்து வாக்களியுங்கள் என்றும் பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments