Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் – அதிமுக சார்பில் அன்புச்செழியனா ?

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (11:02 IST)
4 தொகுதிகளுககான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடக்க இருக்கையில் திருப்பரங்குன்றம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அன்பிச்செழியன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 29 ஆம் தேதி முடிகிறது. இந்நிலையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அமமுக ஆகியக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இன்னமும் அதிமுக தலைமையிலான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் 4 தொகுதிகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் பிரபல தயாரிப்பாளரான அன்புச்செழியன் களமிறங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் அதிமுக தலைமையிடம் விருப்பமனுத்தாக்கல் செய்துள்ளார்.

அன்புச்செழியன் பிரபல தயாரிப்பாளர் அசோக்குமார் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரைக் கைது செய்யாமல் அதிமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் தடுத்ததாகவும் அப்போது குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து வெகு காலமாக வெளியில் தலைக்காட்டாமல் இருந்த அன்புச்செழியன் இப்போது இடைத்தேர்தலில் களமிறங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments