Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக செய்ய பயந்தது, நாங்க செய்கிறோம் - அன்பில் மகேஷ்

அதிமுக செய்ய பயந்தது, நாங்க செய்கிறோம் - அன்பில் மகேஷ்
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:42 IST)
கடந்த கால ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக பயந்தது. ஆனால் நாங்கள் செய்துள்ளோம் என அன்பில் மகேஷ் பேச்சு. 

 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர்  9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9 களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 12 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முழு ரிசல்ட் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே விழுப்புரத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்ற அன்பில் மகேஷ், தேர்தலின் போது கொடுத்த 500 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்று அறிவித்ததோடு அந்த அறிவிப்பை முதல்வர் உடனடியாக நிறைவேற்றி வைத்தார் என தெரிவித்தார். 
 
அதோடு திமுக அரசாங்கம் அமைய காரணமாக இருந்த மக்களின் தேவை அறிந்து திட்டங்களை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார். எனவே மக்களின் பிரச்சனையை அறியவே நேரில் வந்து கொண்டிருக்கிறோம். இனியும் வருவோம். கடந்த கால ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக பயந்தது. ஆனால் நாங்கள் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடு முழுவதும் பள்ளிகளை திறக்க ஐசிஎம்ஆர் பரிந்துரை