Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது எப்போது?

Advertiesment
தமிழகம்
, செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (12:02 IST)
தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தகவல். 

 
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த சூழலில் கடந்த 1 ஆம் தேதி முதலாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
 
இதனைடையே இன்று மாலை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் மேலும் தெரிவித்துள்ளதாவது... 
 
தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து நாளை முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதன் பின்னர் அவர் இது குறித்து முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிரிழப்பை வேடிக்கை பார்க்காமல் உண்மையை சொல்லுங்கள்! – திமுகவுக்கு எடப்பாடியார் கோரிக்கை!