Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 முதல் 9ம் வகுப்புகளுக்கு முன்கூட்டிய விடுமுறை! – அன்பில் மகேஷ் அறிவிப்பு!

Webdunia
புதன், 4 மே 2022 (13:07 IST)
வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் காரணமாக பல மாநிலங்களிலும் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் வெயில் காரணமாக பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைத்தல் மற்றும் முன்கூட்டிய விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகள் எழுந்து வந்தன.

இந்நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நாட்கள் தவிர மீத நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி 24 மணி நேரத்திற்கு முன்பே வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் தெரிந்துவிடும்: ரயில்வே துறை

மகளிர்கள் ஓசியில் பயணம் செய்யுங்கள், ஆண்கள் வீட்டு வேலை செய்யட்டும்: திமுக எம்.எல்.ஏ

சீனாவில் அனைத்து ஏஐ செயலிகளுக்கும் தற்காலிக தடை! காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

கீழடிக்கு ஆதாரம் கேட்கிறாங்க.. ராமருக்கு என்ன ஆதாரம்? - வைரமுத்துவின் வைரல் கவிதை!

என் அண்ணன் கொலையை வைத்து பிரபலமடைகிறேனா? ராஜா ரகுவம்சி சகோதரி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments