Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகின் மிகச்சிறிய பென்சிலை உருவாக்கி இந்திய வாலிபர் சாதனை

உலகின் மிகச்சிறிய பென்சிலை உருவாக்கி இந்திய வாலிபர் சாதனை
, வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (11:18 IST)
உத்தரகாண்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா உலகிற்கு பல்வேறு சாதனையாளர்களை அறிமுகப்படுத்திய மிகப்பெரிய நாடாகும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை படைத்தவர். கூகுலின் தலைமைச் செயலதிகாரியாக திகழும் சுந்தர் பிச்சை இந்தியாவை சேர்ந்தவர். மேலும் பல்வேறு சாதனையாளர்களின் இருப்பிடமாக இந்தியா திகழ்கிறது. 
webdunia
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம்  ஹால்டுவானியைச் சேர்ந்த பிரகாஷ் சந்திரா உபாத்யே என்பவர்  5 மி.மீ நீளமும் 0.5 மி.மீ அகலமும் கொண்ட ஒரு சிறிய பென்சிலை உருவாக்கி இருக்கிறார். இந்த பென்சிலை உருவாக்க அவருக்கு 4 நாட்கள் தேவை பட்டதாக கூறியிருக்கிறார். இது உலகின் மிகச்சிறிய பென்சில் என்று சாதனை படைத்துள்ளது. இதேபோல் பல சாதனைகளை படைக்க் பிரகாஷை பலர் பாராட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்டப்பகலில் பொது இடத்தில் இளம்பெண்ணை முத்தமிட்ட வாலிபர் கைது(வைரலாகும் வீடியோ காட்சி)