Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் உதயகுமார் டெலிபோன் பில் கட்டல..! – தகுதி நீக்கம் செய்ய அமமுக கோரிக்கை!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:50 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆர்.பி.உதயகுமார் டெலிபோன் பில் கட்டாததால் அவரது வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென அமமுகவினர் மனு அளித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக டெலிபோன் பில் கட்டாத ஆர்.பி.உதயகுமார் அதை தனது வேட்பு மனுவிலும் சுட்டிக்காட்டவில்லை என அமமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ள அமமுகவினர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாத்தூரில் இருந்தபோது கட்டாமல் இருந்த டெலிபோன் கட்டணம் 17,393 ரூபாயை கட்டாமல் அதை வேட்புமனுவிலும் மறைத்துள்ளதால் அவர் வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments