Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

Advertiesment
பாமக

Mahendran

, சனி, 31 மே 2025 (15:51 IST)
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக மூத்த தலைவர் ஜி.கே. மணி, “இன்று கட்சியில் ஏற்படும் சிக்கல்களுக்கு என்னை காரணமாகச் சொல்வது மிகவும் வேதனையளிக்கிறது. இதை கேட்டு மனம் உருகி நொந்து அழுந்தேன்,” என்றார்.
 
பாமக நடுவே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் கட்சி செயல்பாடுகளில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இந்த நிலையில் தன்மீது பொறுப்பு சுமத்தப்படுவதை ஜி.கே. மணி எதிர்த்தார். “நான் கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தவன். பாமக சிதறும் நிலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பேனா?” என்றார்.
 
ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே விரைவில் நேரில் சந்திப்பு நடைபெற வேண்டும் என்பது கட்சி ஆதரவாளர்களின் கருத்தாகவும், தான் பொறுப்பாளர்கள் மாற்றத்தை எதிர்த்த போதிலும் அது அமல்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.
 
"இப்போது உள்ளே சென்று பேசினால், ஏன் இதைப் பற்றிப் பேசினாய் என்று கேள்வி எழும்," என்று மனவருத்தத்துடன் கூறினார்.
 
கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து அவதானித்த ஜி.கே. மணி, “இரண்டு வழிகள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று – குடும்பத்தோடு தலைமறைவாவேன், இல்லை எனில் உயிரையே கைவிடுவது” என அதிர்ச்சிகரமாக கருத்து தெரிவித்தார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!