Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்லடம் கொலை வழக்கில் கைதானவரின் கால் முறிந்தது.. என்ன நடந்தது?

பல்லடம் கொலை வழக்கில் கைதானவரின் கால் முறிந்தது.. என்ன நடந்தது?
, செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (07:39 IST)
பல்லடம் கொலை வழக்கில் கைதானவரின் கால் முறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நேற்று பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பதட்ட நிலை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் பல்லடம் கொலை வழக்கில் செல்லமுத்து என்பவர் கைதான நிலையில் அவர் தான் பயன்படுத்திய கத்திகளை எடுத்து தருவதாக காவல்துறையிடம் கூறியுள்ளார். அப்போது அவரை போலீசார் அழைத்து செல்கிறபோது திடீரென அவர் தப்ப முயற்சித்ததாகவும் மாடியில் இருந்து குதித்து தப்பிய ஓடிய போது அவருடைய கால் எலும்பு முறிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து போலீசார் அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளதாகவும் தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை தந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திரயான்-3: நிலவில் விக்ரம் லேண்டர் தாவிக் குதித்தது எப்படி? பிரக்யான் ரோவர் மீண்டும் இயங்குமா?