Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

Mahendran
வெள்ளி, 12 ஜூலை 2024 (17:57 IST)
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
சனிக்கிழமைகளில் வழக்கமாக பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், நாளை 2வது சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள் அனைத்து சனிக்கிழமைகளிலும் இயங்கி வந்த நிலையில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. 
 
இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில் தற்போது நாளை இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே நாளை தமிழக முழுவதும் பள்ளிகள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதே போல ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்றாலும் இரண்டாவது சனிக்கிழமை இனி தொடர்ச்சியாக விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments