Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னை பாராட்டிய செல்லூர் ராஜூ வீட்டிற்கு சென்ற அழகிரி....

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (10:29 IST)
அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டிற்கு சென்று அவரை அழகிரி சந்தித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ “அழகிரியிடம் ஒரு ஆற்றல் இருக்கிறது. அதனால்தான், ஆயிரக்கணக்கானோர் அவர் நடத்திய பேரணியில் கலந்து கொண்டனர். இது அவருக்கு ஆதரவு இருப்பதை காட்டுகிறது” என பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், இன்று காலை மதுரையில் உள்ள செல்லூர் ராஜூவின் வீட்டிற்கு சென்ற அழகிரி அவரை சந்தித்து பேசினார். அப்போது, மரணமைடந்த செல்லூர் ராஜூவின் தாயின் உருவ படத்திற்கு அவர்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின் சிறுதி நேரம் அவரிடம் பேசிவிட்டு அழகிரி அங்கிருந்து கிளம்பி சென்றார்.
 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி “செல்லூர் ராஜூவின் தாய் மரணமடைந்ததால் விசாரிக்க வந்தேன். நீங்கள் நினைப்பது போல் ஒன்றுமில்லை” எனக்கூறி விட்டு சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments