Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மாநாட்டிற்கு சென்ற அஜித் ரசிகர் மாரடைப்பால் உயிரிழப்பு: தாயார் கண்ணீர்

Mahendran
திங்கள், 28 அக்டோபர் 2024 (11:03 IST)
விஜய் மாநாட்டிற்கு சென்ற அஜித் ரசிகர் ஒருவர், மாநாட்டை முடித்து வீட்டுக்கு வந்தவுடன் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக, அவரது தாயார் கண்ணீர் வடித்து கதறி அழுவது காண்போர் நெஞ்சை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில், இந்த மாநாட்டிற்கு சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல், நடுநிலை வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த மாநாட்டில் கூடினார்கள். குறிப்பாக விஜய்க்கு நேர் எதிர் போட்டியாளரான அஜித் ரசிகர்களும் ஏராளமாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் மாநாட்டில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர், மாநாட்டிற்கு சென்று வீடு திரும்பியவுடன் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும், தனது மகனின் இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லை என அவரது தாயார் கண்ணீர் வடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய தாழ்தள பேரூந்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்....

'கிராம உதயம்' சார்பில், பெண்களுக்கு விருது வழங்கும் விழா-ஏ.பி.ஜே அப்துல்கலாமின்பேரன் பங்கேற்பு....

சீமான் ஒரு நல்ல என்டர்டைனர், அவர் பேசுவதை ரசித்து, சிரித்து விலகிக் கொள்ள வேண்டும் -பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேச்சு.

234 தொகுதிகளிலும் ‘கலைஞர் நூலகம்’: துணை முதல்வர் உதயநிதி தகவல்

2026ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும்: மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல்

அடுத்த கட்டுரையில்
Show comments