Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை! – சேலம் மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (10:05 IST)
சேலம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



சேலத்தில் உள்ள விமான நிலையத்தில் பல உள்நாட்டு விமானங்களின் சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமலுக்கு வந்தபோது சேலம் விமான நிலையத்திற்கான அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

அதற்கு பிறகு 3 ஆண்டுகளாக சேலம் விமான நிலையத்தில் விமான சேவைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் முதல் மீண்டும் சேலத்தில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சேலத்தில் இருந்து விமான சேவைகள் தொடங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இது சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருநங்கைகள் பெண்கள் கிடையாது! அவர்களுக்கு சலுகையும் கிடையாது! - அங்கீகாரத்தை ரத்து செய்த நீதிமன்றம்!

பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்.. முதல்வருக்கு தமிழிசை கோரிக்கை..

2 நாள் தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? நிப்டி சென்செக்ஸ் விவரங்கள்..!

ரூ.71,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சம் எப்போது வரும்?

ஒளரங்கசீப் கல்லறையை பாதுகாக்க ஐநாவுக்கு கடிதம்: முகலாய வம்சத்தின் வாரிசு அதிரடி

அடுத்த கட்டுரையில்
Show comments