3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை! – சேலம் மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (10:05 IST)
சேலம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



சேலத்தில் உள்ள விமான நிலையத்தில் பல உள்நாட்டு விமானங்களின் சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமலுக்கு வந்தபோது சேலம் விமான நிலையத்திற்கான அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

அதற்கு பிறகு 3 ஆண்டுகளாக சேலம் விமான நிலையத்தில் விமான சேவைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் முதல் மீண்டும் சேலத்தில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சேலத்தில் இருந்து விமான சேவைகள் தொடங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இது சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments