அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்.. அமித்ஷா கருத்துக்கு எடப்பாடி பதிலடி..!

Mahendran
சனி, 12 ஜூலை 2025 (12:59 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், பாஜக ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் என்று தெரிவித்திருந்த நிலையில், இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  பதிலளித்துள்ளார். "தமிழ்நாட்டில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அமித்ஷா அளித்த விரிவான நேர்காணலில், "தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், அவ்வாறு வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்குபெறும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்தக் கருத் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எடப்பாடி பழனிசாமி, "நான்தான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments