திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை கொண்டு வருவோம்: எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி

Mahendran
புதன், 10 செப்டம்பர் 2025 (16:13 IST)
பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அதிமுக திட்டங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தொடரும் என்று உறுதியளித்தார்.
 
கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். "அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், காங்கிரீட் முறையில் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்" என்று அவர் வாக்குறுதி அளித்தார். மேலும், நெசவாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என்றும், அதிமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட ₹350 கோடி ரூபாய் மானியம் மீண்டும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
விவசாயிகள் நலனுக்கான திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார். "அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் மீண்டும் கொண்டுவரப்படும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டப்பகலில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு, துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஈபிஎஸ் ஆவேசம்

TN TET 2026: சிறப்பு டெட் தேர்வு!.. விண்ணப்பங்கள் வரவேற்பு!.. முழு தகவல்!...

பாஜகவும் தேர்தல் ஆணையமும் சதி: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெறும்: நவம்பர் 21 முதல் கனமழை..!

எங்கருந்து வந்தீங்க?!. SIR படிவம் தொடர்பாக கோபப்பட்ட மன்சூர் அலிகான்!..

அடுத்த கட்டுரையில்
Show comments