அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (16:34 IST)
அமித் ஷாவை  சந்தித்தே தீர வேண்டும், அவரிடம் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும் என்று அமைச்சர் அமித்ஷா தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு ஆட்டோவில் வந்த அகோரி ஒருவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்த நிலையில், விடிய விடிய பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
 
இந்த நிலையில், அவர் தங்கி உள்ள கிண்டி நட்சத்திர ஓட்டலில் திடீரென ஆட்டோவில் வந்த அகோரி ஒருவர், அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறை அதிகாரியிடம், "அமித் ஷாவை நான் சந்தித்தே ஆக வேண்டும். அவருடன் ஒரு முக்கிய செய்தி சொல்ல வேண்டும்," என்று தெரிவித்தார்.
 
மேலும், “இந்தியா அமெரிக்காவுடன் நிற்க வேண்டுமா அல்லது சீனாவுடன்ம் நிற்க வேண்டுமா? சீனாவை நாம் பகைத்துக் கொண்டால், சீனா இலங்கையில் இருக்கும் அம்மன் தோட்டா துறைமுகத்தில் படையை வைத்து இந்தியாவை தாக்கும்,” என்றும், “இது குறித்து நான் அமித்ஷா அவர்களிடம் பேச வந்திருக்கிறேன். என்னை அனுமதி எண்கள்,” என்றும் தெரிவித்தார்.
 
ஆனால், அவரை அமித் ஷா தங்கி இருக்கும் ஹோட்டலுக்குள் காவல்துறையினர் அனுமதிக்க மறுத்தனர்.
 
இதனைத் தொடர்ந்து, ஒரு செல்பி வீடியோ ஒன்றை எடுத்து, “இந்த வீடியோவை அமித்ஷாவிடம் போட்டு காட்டுங்க,” என்று ஆவேசமாக கூறியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments