Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (16:34 IST)
அமித் ஷாவை  சந்தித்தே தீர வேண்டும், அவரிடம் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும் என்று அமைச்சர் அமித்ஷா தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு ஆட்டோவில் வந்த அகோரி ஒருவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்த நிலையில், விடிய விடிய பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
 
இந்த நிலையில், அவர் தங்கி உள்ள கிண்டி நட்சத்திர ஓட்டலில் திடீரென ஆட்டோவில் வந்த அகோரி ஒருவர், அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறை அதிகாரியிடம், "அமித் ஷாவை நான் சந்தித்தே ஆக வேண்டும். அவருடன் ஒரு முக்கிய செய்தி சொல்ல வேண்டும்," என்று தெரிவித்தார்.
 
மேலும், “இந்தியா அமெரிக்காவுடன் நிற்க வேண்டுமா அல்லது சீனாவுடன்ம் நிற்க வேண்டுமா? சீனாவை நாம் பகைத்துக் கொண்டால், சீனா இலங்கையில் இருக்கும் அம்மன் தோட்டா துறைமுகத்தில் படையை வைத்து இந்தியாவை தாக்கும்,” என்றும், “இது குறித்து நான் அமித்ஷா அவர்களிடம் பேச வந்திருக்கிறேன். என்னை அனுமதி எண்கள்,” என்றும் தெரிவித்தார்.
 
ஆனால், அவரை அமித் ஷா தங்கி இருக்கும் ஹோட்டலுக்குள் காவல்துறையினர் அனுமதிக்க மறுத்தனர்.
 
இதனைத் தொடர்ந்து, ஒரு செல்பி வீடியோ ஒன்றை எடுத்து, “இந்த வீடியோவை அமித்ஷாவிடம் போட்டு காட்டுங்க,” என்று ஆவேசமாக கூறியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments