Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அக்னி வீரர்களுக்கான தேர்வு முகாம்: தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (14:29 IST)
தமிழகத்தில் முதல்கட்டமாக அக்னி வீரர்களுக்கான தேர்வு முகாம் ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை நாகர்கோவிலில் நடைபெற உள்ளது
 
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் முதல் கட்டமாக அக்னி வீரர்கள் தேர்வு முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது
 
ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, அரியலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஜூலை 30ஆம் தேதிவரை joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

இன்று ஒரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments