Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அக்னி வீரர்களுக்கான தேர்வு முகாம்: தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (14:29 IST)
தமிழகத்தில் முதல்கட்டமாக அக்னி வீரர்களுக்கான தேர்வு முகாம் ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை நாகர்கோவிலில் நடைபெற உள்ளது
 
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் முதல் கட்டமாக அக்னி வீரர்கள் தேர்வு முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது
 
ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, அரியலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஜூலை 30ஆம் தேதிவரை joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 எம்பிக்கள் பயணம் செய்த விமானம் நடுவானில் திடீர் இயந்திர கோளாறு.. சென்னையில் தரையிறக்கம்..!

தக்காளி விலை திடீர் உயர்வு.. சென்னையில் ஒரு கிலோ எவ்வளவு?

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments