Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்.. பொதுமக்கள் அருகில் செல்ல தடை..!

அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்.. பொதுமக்கள் அருகில் செல்ல தடை..!
, திங்கள், 18 டிசம்பர் 2023 (13:10 IST)
தென் மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக அகஸ்தியர் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதாகவும் இதனால் அருவிப்பகுதிக்கு அருகில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன 
 
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது 
 
எந்த விதமான காற்றழுத்த தாழ்வு நிலை இல்லாமல், புயல் இல்லாமல், பருவமழை கூட இல்லாமல் திடீரென கனமழை பெய்து வருவது வானிலை ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அருவிக்கு அருகில் செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டுவதால் குற்றாலத்தில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்: அந்தரத்தில் தொங்கும் தூத்துக்குடி தண்டவாளம்..!