Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகளை அடுத்து பார்கள் திறக்கப்படுமா?

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (08:08 IST)
இன்று முதல் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் மது வாங்க வருபவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து மதுக்களை வாங்கி செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
மேலும் மதுக் கடைகளில் கூட்டம் கூடுவதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து பார்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என பார் உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர் 
 
இதுகுறித்து டாஸ்மாக் பார் சங்கத்தின் தலைவர் கூறியபோது டாஸ்மாக் பார்களில் பணி செய்யும் தொழிலாளர்கள் இந்த வருமானத்தை வைத்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே அரசு மிக விரைவில் பார்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 
டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதித்தது போல் டாஸ்மாக் பார்கள் செயல்படவும் அனுமதிக்க வேண்டும் என பார் உரிமையாளர் சங்கத்தினர் கூறியுள்ள நிலையில் இதற்கு அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments