மதுரையை அடுத்து சென்னையில் கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி!

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (14:58 IST)
மதுரையை அடுத்து சென்னையில் கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி!
மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா என்பவர் கொரோனாவுக்கு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது சென்னையில் கார்த்திகா என்ற கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையைச் சேர்ந்த 29 வயது மருத்துவர் கார்த்திகா என்பவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் சற்று முன் உயிரிழந்தார் 
 
மருத்துவர் கார்த்திகா உயிர் இழப்பதற்கு முன் அவர் செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் ’தயவுசெய்து கொரோனா வைரஸை யாரும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னால் இப்போது பேசக்கூட முடியவில்லை. இருப்பினும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக பேசுகிறேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார். மதுரையை அடுத்து சென்னையிலும் கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments