Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் காய்கறி வாங்க வேண்டுமா? இந்த எண்ணுக்கு டயல் செய்தால் போதும்!

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (14:55 IST)
தமிழகத்தில் நாளை முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றே ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்கள் வாங்கி குவித்து வருகின்றனர். இதனால் காய்கறி மார்க்கெட்டில் மற்றும் மளிகை கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் தினமும் கிடைக்கும் என்றும் காய்கறிகளை மொத்தமாக வைத்துக்கொள்ள வாங்கி வைத்துக் கொள்ள தேவையில்லை என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார்
 
அந்த வகையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ’நாளை முதல் காய்கறி மற்றும் பழங்கள் தேவைப்படுவோர் 044-2225 3884 என்ற எண்ணுக்கு டயல் செய்தால் வீட்டிற்கே கொண்டுவந்து தோட்டக் கலைத் துறையினர் வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை பொது மக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை மாநகரத்தில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவுக்கு காய்கறிகள் பழங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments