நேற்று ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (07:35 IST)
நேற்று ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொரோனா
நேற்று  கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்
 
இந்த நிலையில் கோவை ஆட்சி தலைவரை அடுத்து நேற்று காஞ்சிபுரம் ஆட்சி தலைவர் பொன்னையா அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில்  2 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில தினங்களாக காஞ்சிபுரம் ஆட்சி தலைவர் பொன்னையா அவர்கள் காய்ச்சல் காரணமாக அலுவலகத்திற்கு வராமல் தனிமைப்படுத்திக் கொண்டிருந்ததாகவும், அவருக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்த நிலையில் நேற்று பொன்னையாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி காஞ்சிபுரம் ஆட்சி தலைவர் பொன்னையா அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை.. மொத்த மதிப்பு ரூ.9.5 கோடி..!

கரப்பான் பூச்சியை கொல்ல முயன்றபோது நடந்த விபரீதம்.. பெண் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments