சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த மேலும் அவகாசம்

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (07:27 IST)
சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் 15 நாட்கள் நீட்டித்து அதாவதும் ஜூலை 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் 4 மாத காலத்திற்கான மின்நுகர்வு, 2 மாதங்களுக்கான வீதப்பட்டி அடிப்படையில், சமமாக பிரிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த மின்நுகர்வு 2 மாதங்களுக்கான வீதப்பட்டிப்படி, மின்கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
 
இதனால் மின்கணக்கீடு செய்யும் போது, தனித்தனியே ஒவ்வொரு 2 மாதங்களுக்கான நுகர்விலும் தலா 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு, தொகை கணக்கிடப்பட்டுள்ளது என்றும், அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், ஏற்கனவே மார்ச் மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களில் முந்தைய மாத மின்கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி திரைப்படங்கள், பாடல்களுக்கு தடை: மசோதா கொண்டு வர தி.மு.க. அரசு பரிசீலனையா?

மீண்டும் ஒரு பல்க் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கும் அமேசான்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்! வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது!? - முழு விவரம்!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.. உடன் வந்த நண்பர் தான் காரணமா?

அமெரிக்காவுக்கான சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியது: 2 மாதத்திற்கு பின் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments